16,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

கொழும்பிற்கான தொடருந்து சேவை யாழ்ப்பாணத்திலிருந்து மீண்டும் ஆரம்பம்

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜுலை மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் முதல் கொழும்பிற்கான தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வடக்கிற்கான தொடருந்து பாதையில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றமையினால் கடந்த ஜனவரி மாதம் 05 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து சேவை அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.


இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் மஹவ முதல் ஓமந்தை வரையிலான தொடருந்து பாதை புனரமைக்கப்படவிருந்த நிலையில், அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான தொடருந்து பாதை முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளது.

எனினும், அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான தொடருந்து பாதை புனரமைப்பு பணிகள் மழைக்காரணமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.


இந்த நிலையிலேயே கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரையிலான தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது





கொழும்பிற்கான தொடருந்து சேவை யாழ்ப்பாணத்திலிருந்து மீண்டும் ஆரம்பம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு