16,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் 328 பொருட்களுக்கான இறக்குமதிக்கட்டுப்பாடுகள்

அமுலுக்குவரும் வகையில் நீக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

நாடு தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த காலப்பகுதியில் வெளிநாட்டு நாணய வெளிப்பாய்ச்சலைத் தடுக்கும் நோக்கில் நிதியமைச்சினால் பல்வேறு பொருட்களுக்கு இறக்குமதித்தடையும், மட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.



தற்போது நாட்டின் பொருளாதாரம் ஓரளவுக்கு மீட்சியடைந்துவரும் நிலையில், இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே 328 பொருட்களின் இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை (20) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் நீக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.





இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் 328 பொருட்களுக்கான இறக்குமதிக்கட்டுப்பாடுகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு