ஹாலிவுட்,பாலிவுட்,டோலிவுட் என இந்தியா மற்றும் அல்ல உலக பிரபலம் பெற்றவர் சன்னி லியோன் கரன்ஜித் கௌர் என்ற இயற்பெயரை கொண்ட சன்னி லியோன் ஒரு இண்டோ- கனடியன் குடும்பத்துடன் கனடாவில் வாழ்ந்த இவர் சீக்கிய குடும்பத்தை சேர்ந்தவர். தனது இளமை காலத்தில் பான் இண்டஸ்ட்ரியில் இருந்த சன்னி லியோன், பின் அதில் இருந்து முற்றிலும் வெளிவந்து கணவருடன் இந்தியாவுக்கு வந்து சன்னி லியோன் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கினார். ஜாக்பாட், ராகினி எம்எம்எஸ்-2 போன்ற பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிய சன்னி லியோனுக்கு அவரின் திறமையால் அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்து முக்கிய நடிகையாக மாறினார். இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் சன்னி லியோனுக்கு வாய்ப்புகள் வர தொடங்கியது.பொது வாழ்கையில் பல நல்ல காரியம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் சன்னி லியோன்.
இந்தியாவைச் சேர்ந்த பெண் குழந்தை தத்தெடுத்து வளர்த்து வரும் சன்னி, வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் வளர்த்து வருகிறார்.
தமிழில் 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்த சன்னி லியோனுக்கு தமிழக ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பு கிடைத்தது. சன் சிட்டி மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சன்னி லியோன், அடுத்ததாக தமிழில் வீரமாதேவி என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்துள்ள சன்னி லியோன் சொத்து விவரம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது எல்லா மொழிகளிலும் சன்னி லியோனுக்கு மவுசு இருக்கும் நிலையில் அவரின் சம்பாத்தியத்திற்கு குறைச்சலே இல்லை என்று தான் கூற வேண்டும். தற்போது அவரின் சொத்து மதிப்பு 100 கோடிக்கு மேல் தாண்டியுள்ளது என்ற விவரம் கசிந்துள்ளது மேலும் இவருக்கு லொஸ் ஏஞ்சல்ஸில் சொந்தமாக பிரம்மாண்ட பங்களாவும், மும்பையில் சொந்தமாக வீடும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..