பாகிஸ்தானுக்கு எதிராக எஸ்.எஸ்.சி. மைதானத்தில் திங்கட்கிழமை (24) ஆரம்பமான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
48.4 ஓவர்கள் மாத்திரமே எதிர்கொண்ட இலங்கை சார்பாக நால்வரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
திமுத் கருணாரட்ன (17), தினெஷ் சந்திமால் 34), தனஞ்சய டி சில்வா (57), ரமேஷ் மெண்டிஸ் (27) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்கள் என்ற இக்கட்டான சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணி ஓரளவு கௌரவமான நிலையை அடைய உதவினர்.
இந்தத் தொடரில் தனஞ்சய டி சில்வா தொடர்ச்சியாக பெற்ற 3ஆவது அரைச் சதம் இதுவாகும்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் அப்ரார் அஹ்மத் 69 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நசீம் ஷா 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
0 Comments
No Comments Here ..