06,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி, பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் தொழிலாளர்கள் இன்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.


அப்போது, பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வெடிவிபத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு குடோனில் பற்றி எரியும் நெருப்பை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்




பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு