மகாராஷ்டிரா மாநிலம் தனே மாவட்டத்தில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் 3-ம் கட்ட பணி நடைபெற்று வந்தது. இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக கிர்டர் (ராட்சத இயந்திரம்) பயன்படுத்தப்படும்.
திடீரென அந்த ராட்சத இயந்திரம் சரிந்துள்ளது. இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 14 பேர் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.
அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மும்பை- நாக்பூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலையாக இந்த சாலை கட்டப்பட்டு வருகிறது. இந்த சாலை நாக்பூர், வாசிம், வர்தா, அகமதாபாத், பல்தானா, அவுரங்கபாத், அமாரவதி, ஜல்னா, நாஷிக் மற்றும் தானே மாவட்டங்களை கடந்து செல்கிறது
0 Comments
No Comments Here ..