திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரின் மூலம் பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா.
இந்த நிலையில் கோவையை சேர்ந்த ஸ்ருதி சண்முகபிரியாவிற்கு குடும்பத்தினர் ஏற்பாட்டின் மூலம் கடந்த ஆண்டு அரவிந்த் சேகர் என்பவருடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது.
அரவிந்த் சேகர் உடற்பயிற்சி செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.
மேலும் அரவிந்த் சேகர் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது ஜிம் டிரெய்னராக பணியாற்றிவந்தார்.
வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் ஒரு வருடமாக கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த ஸ்ருதி சண்முகப்பிரியா வாழ்க்கையில் தற்போது பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
அவருடைய கணவர் அரவிந்த் சேகர் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஸ்ருதி சண்முகபிரியாவின் கணவர் மறைவு தற்போது சீரியல் உலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
0 Comments
No Comments Here ..