நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நேற்று நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் சுவீடனை 2:1 கோல்கள் விகிதத்தில் ஸ்பெய்ன் வென்றது.
81 ஆவது நிமிடத்தில் ஸ்பானிய வீராங்கனை சல்மா பரலேலோ, போட்டியின் முதல் கோலைப் புகுத்தினார்.
88 ஆவது நிமிடத்தில் சுவீடனின் ரெபேக்கா புளோம்கிவிட் கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.
எனினும், 90 ஆவது நிமிடத்தில் ஸ்பானிய வீராங்கனை ஒல்கா கார்மோனா கோல் புகுத்திய கோல் அவ்வணியை இறுதிப்போட்டிக்கு முன்னேறச் செய்தது.
நாளை சிட்னியில் நடைபெறவுள்ள 2ஆவது அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதவுள்ளன
0 Comments
No Comments Here ..