இதன்படி ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவி வகிக்கும் முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுவார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 15-ம் தேதி தனது சுதந்திர தின உரையில் வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தான் மீண்டும் ஆட்சிக்கு வருவேன் என நம்பிக்கை தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதற்கு மறுநாள் இந்தக் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
டைம்ஸ் நவ் – இடிஜி நடத்திய இந்த கருத்துக்கணிப்பில் நாட்டில் தற்போது தேர்தல் நடைபெற்றால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 296 முதல் 326 வரையிலான இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி 160 முதல் 190 வரையிலான இடங்களில் வெல்லும் என தெரியவருகிறது.
வரும் தேர்தலில் என்டிஏ அதிகபட்சம் 326 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டாலும் கடந்த 2019 தேர்தலில் என்டிஏ பெற்ற தொகுதிகளைவிட இது குறைவாகும். எனெனில் கடந்த தேர்தலில் என்டிஏ 353 இடங்களை பெற்றுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர்
0 Comments
No Comments Here ..