01,May 2024 (Wed)
  
CH
சினிமா

அட்ஜஸ்ட்மென்டுக்கு சம்மதித்தால் உடனே படத்தில் நடிக்க வாய்ப்பு – மனம் திறந்த நடிகை

தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் கண்டநாள் முதல், மாநகரம், கசட தபற, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு மொழியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.


இந்த நிலையில் சினிமா வாய்ப்பு கேட்டபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நடிகை ரெஜினா கசாண்ட்ரா பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, முதலில் நான் சினிமாவில் நடிக்க வந்த போது பட வாய்ப்பு கேட்டு சிலரை அணுகினேன். அதில் ஒருவர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு அட்ஜஸ்ட்மென்டுக்கு சம்மதித்தால் உடனே படப்பிடிப்புக்கு செல்லலாம் என்றார்.

முதலில் அவர் சொன்னது எனக்கு புரியவில்லை. சம்பளம் விஷயம் பற்றி சொல்கிறார் என்று நினைத்து சரி எனது மானேஜர் உங்களிடம் பேசுவார் என்றேன். மானேஜர் பேசிய பிறகுதான் போன் செய்தவர் படுக்கைக்கு அழைக்கும் நோக்கில் என்னை கேட்டு இருக்கிறார் என்று புரிந்தது. அப்போது எனக்கு 20 வயது தான். சில நடிகைகள் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொண்டு இருக்கலாம். இன்னும் சில நடிகைகள் பெயர் வாங்க பொய் கூட சொல்வார்கள் என்று கூறினார்.




அட்ஜஸ்ட்மென்டுக்கு சம்மதித்தால் உடனே படத்தில் நடிக்க வாய்ப்பு – மனம் திறந்த நடிகை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு