29,Apr 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றமும், முதன்மை அமர்வு நீதிமன்றமும் மறுப்பு

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல், செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றமும், முதன்மை அமர்வு நீதிமன்றமும் மறுத்துவிட்டன.

இந்நிலையில் அமலாக்கத்துறையின் வழக்கில் ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பதை உயர்நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வருமாறு செந்தில் பாலாஜி தரப்புக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி அறிவுறுத்தியிருந்தார். 


அதன்படி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் செந்தில் பாலாஜி தரப்பு முறையிட்ட போது, தலைமை நீதிபதிதான் முடிவெடுக்க முடியும் என கூறிவிட்டனர்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது குறித்து நீதிபதிகள் ஆர்.சுரேஷ் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு இன்று விசாரணை நடத்தவுள்ளது.




அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றமும், முதன்மை அமர்வு நீதிமன்றமும் மறுப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு