27,Apr 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

மனைவியை 12 ஆண்டுகளாக வீட்டுச்சிறை வைத்த கணவன்.. இறுதியில் நேர்ந்த சோகம்!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை 12 ஆண்டுகளாக வீட்டுக்குள் கணவனே சிறைவைத்த சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள எச்.டி.கோட் தாலுகா எச்.மாடகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் சுனலயா. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு எச்.டி கோட் கிராமத்தைச் சேர்ந்த சுமா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

அவரை திருமணம் செய்த நாளில் இருந்து சுமாவின் நடத்தை மீது சுனலயா சந்தேகம் கொண்டார். இதன் காரணமாக ஒரு அறையில் சுமாவை வைத்து பூட்டி 3 பூட்டுக்களைப் போட்டார். விளக்குகள் இல்லாத அந்த இருட்டறையில் சுமா தவித்து வந்தார்.


அத்துடன் தன் மனைவி யாரிடமும் பேசக்கூடாது என்பதற்காக வீட்டின் ஜன்னல்களையும் சுனலயா பூட்டி வைத்தார். மேலும் சுமா இருந்த அறையில் கழிப்பறை இல்லை. இதனால் வாளியை வைத்து,அவர் மலம், சிறுநீர் கழிப்பது வழக்கம். அதைக் காலையில் சுனலயா எடுத்து வெளியேற்றியுள்ளார். இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக சுமாவின் நடமாட்டம் இல்லாததால் சுனலயாவிடம் உறவினர்கள் விசாரித்தும் உள்ளனர். ஆனால், அவர் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.


இந்த நிலையில், இருட்டறையில் கடந்த 12 ஆண்டுகளாக சுமா அடைத்து வைக்கப்பட்டதை அறிந்த வழக்கறிஞர் சித்தப்பாஜி சாந்த்வான் கேந்திரா என்பவர் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து காவல் துறை அதிகாரி சுபான் தலைமையில் போலீஸார் சுனலயா வீட்டிற்கு நேற்று இரவு சென்று பூட்டுக்கள் மற்றும் கதவை உடைத்து சுமாவை மீட்டனர்.


இச்சம்பவம் குறித்து எச்.டி.கோட் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் சுமாவையும், அவரது குழந்தைகளையும் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய சுனலயாவை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மைசூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மனைவியை 12 ஆண்டுகளாக வீட்டுச்சிறை வைத்த கணவன்.. இறுதியில் நேர்ந்த சோகம்!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு