03,May 2024 (Fri)
  
CH
விளையாட்டு

இந்திய அணி தலைவர் தொடர்பில் விசேட அறிவிப்பு!

நடப்பாண்டு டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா தான் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய்ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஜூன் 1ஆம் முதல் 29 ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெறவுள்ளது. 


முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த அணிகள், ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 பிரிவிலிருந்து நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும். 


ஜூன் 26 மற்றும் 27-ம் திகதிகளில் அரையிறுதி போட்டியும், அதை தொடர்ந்து ஜூன் 29-ம் திகதி இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளது.  இந்த நிலையில் ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிடம், டி20 உலகக் கிண்ண தொடர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 


அதற்குப் பதில் அளித்த அவர், இந்தத் தொடரில் இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா தான் என உறுதிபட தெரிவித்துள்ளார். இந்த தகவல் இந்திய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.




இந்திய அணி தலைவர் தொடர்பில் விசேட அறிவிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு