01,May 2024 (Wed)
  
CH
இந்திய செய்தி

திருமண நிகழ்வுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!

இந்தியாவின், உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில் திருமண நிகழ்வுக்காகச் சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீது உயர் அழுத்த மின் கம்பி விழுந்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  காசிப்பூரில் திருமண நிகழ்வுக்காகச் சென்றுகொண்டிருந்த பேருந்தில் 50 பேர் பயணித்துள்ளனர். 

அப்போது திடீரென பேருந்து மீது உயர் அழுத்த மின் கம்பி விழுந்துள்ளது. இதனால் பேருந்தில் தீப்பற்றியது. இதனைக் கண்டு அருகில் இருந்த பொதுமக்கள், வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.இந்த விபத்தில் சிக்கி பேருந்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இந்த பேருந்து சி.என்.ஜி. வகை எரிபொருளால் இயங்கும் வகையைச் சேர்ந்தது எனவும் கூறப்படுகிறது. பேருந்து தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




திருமண நிகழ்வுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு