ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன எஞ்சியுள்ள தொடரில் இருந்து விலகியுள்ளார்.
தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் நாடு திரும்பவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் அவர் விரைவில் குணமடையவும் அந்த அணியின் நிர்வாகம் வாழ்த்தியுள்ளது.
இந்த தொடரில் சென்னை அணிக்காக ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள மதீஷ பத்திரன 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..