சிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது படம் வெளியாகி மூன்று நாட்களில் வசூல் நிலவரம் எவ்வளவு என்கிற தகவலை பார்ப்போம்.
புதுமுக இயக்குநர் அபிஷான் ஜீவிந் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம், டூரிஸ்ட் ஃபேமிலி. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது, இதனால் அங்கிருந்து கள்ளப்படகு மூலமாக ஒரு குடும்பம் தமிழ்நாட்டிற்கு வருகிறது. வரும் இடத்தில் இவர்களுக்கே தெரியாமல் ஒரு பிரச்சனையில் சிக்கி கொள்கின்றனர். அதிலிருந்து தப்பித்தார்களா? என்பதுதான் கதை.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இசை, காமெடி, கதை, காட்சியமைப்பு என அனைத்திற்கும் படம் பார்த்தவர்கள் நல்ல மார்க் கொடுத்துள்ளனர். இந்த படத்தில் எந்தவிதமாக கட்டயாக நகைச்சுவை காட்சிகள் எதுவும் இல்லை. இயல்பாக, வாழ்வியலில் நடக்கக்கூடிய விஷயங்களையே படத்தில் கூறியிருக்கின்றனர். கூடவே சில கதாப்பாத்திரங்கள் படத்தில் நடத்தும் லூட்டிகள் மக்களை கவர்ந்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் முதல் நாளில் 1.6 கோடி வசூல் செய்திருந்தது. இது சசிகுமாரின் ஹீரோவாக அவர் நடித்த அதிக வசூல் ஈட்டிய படம் என்ற சாதனை படைத்திருக்கிறது. அதுபோல இந்த திரைப்படம் உலக அளவில் 2.5 கோடி வரை வசூல் கிடைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மூன்று நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் இந்த படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.
டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி உரிமம்:
இதனிடையே டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். முதல் நாளே இந்த திரைப்படத்திற்கு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் கிடைத்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் சுமார் 13 கோடிக்கு வாங்கி உள்ளது. இந்த திரைப்படம் மே மாதத்தின் இறுதி வாரத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
No Comments Here ..