தமிழ் திரையுலகில் எதிர்பாராத ஒரு கூட்டணி உருவாகியுள்ளது. நடிகர் சிம்புவும் (STR) இயக்குனர் வெற்றிமாறனும் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றை உருவாக்கத் தொடங்கியுள்ளனர். சிம்பு ஏற்கெனவே அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்திலும், 'பார்க்கிங்' திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில், திடீரென வெற்றிமாறனுடன் இணைந்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டணி நிச்சயம் ஒரு சிறந்த படத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வட சென்னையில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இது "வடசென்னை 2" திரைப்படத்தின் படப்பிடிப்பாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக, "வடசென்னை" திரைப்படத்தில் அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரத்தில் சிம்புதான் நடிக்கவிருந்தார். ஆனால், தனுஷுக்கும் சிம்புவுக்கும் இடையே இருந்த போட்டி காரணமாக சிம்பு அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. எனவே, இப்போது உருவாகும் இந்தப் படம், "வடசென்னை"யின் பின்னணிக் கதையாக அல்லது அதன் தொடர்ச்சியாக இருக்கலாம் என்ற பேச்சுக்கள் திரையுலக வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகின்றன.
இந்தக் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் படத்தின் தலைப்பு, கதைக்களம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
No Comments Here ..