18,May 2024 (Sat)
  
CH
விளையாட்டு

டோனிதான் இந்தியாவுக்குக் கிடைத்த சிறந்த தலைவர் – சுரேஷ் ரெய்னா

மகேந்திர சிங் டோனி தான் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த தலைவர் என இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்ததில் இருந்து, இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை.

இந்நிலையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். 2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவும் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேட்டியளித்த சுரேஷ் ரெய்னா, இந்திய அணியை மாற்றிய சிறந்த தலைவர் டோனிதான் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியில் நிறைய புதிய திறமைசாலிகள் உள்ளனர் என்றும் இளைஞர்கள் மற்றும் மூத்த வீரர்கள் அடங்கிய கலவை அணியை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடும்போதும் அதிக இரசிகர்களைக் கொண்டுள்ள அணி என்பதாலும் களத்தில் அதிக ஆற்றல் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





டோனிதான் இந்தியாவுக்குக் கிடைத்த சிறந்த தலைவர் – சுரேஷ் ரெய்னா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு