இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று இடம்பெற உள்ளது.
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச அரங்கில் இன்று இந்த போட்டி இடம்பெற உள்ளது.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதலாவது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி 1 க்கு 0 என, தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதேவேளை, இந்த போட்டிக்கு ரசிகர்கள் வந்து செல்ல இலகுவாக இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பேருந்துகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..