22,May 2025 (Thu)
  
CH
இந்திய செய்தி

கொரோனா வைரஸ்: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க உத்தவ் தாக்கரே அறிவுறுத்தல்

கொரோனா உயிர்கொல்லி வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நமது நாட்டிலும் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் குறித்து நேற்று சட்டசபையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மும்பை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 167 பேர் தனிமைபடுத்தப்பட்டனர். அவர்களில் 9 பேர் தான் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இதுவரை மராட்டியத்தில் இந்த நோய் தொற்று உறுதிபடுத்தப்படவில்லை. இது தொடர்பாக மக்கள் பீதி அடைய வேண்டாம்.

மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். ஹோலி கொண்டாட்டத்தை கட்டுப்படுத்தி கொள்ளலாம். ஹோலி தீயில் கொரோனா வைரஸ் எரிக்கப்பட வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.





கொரோனா வைரஸ்: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க உத்தவ் தாக்கரே அறிவுறுத்தல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு