18,May 2024 (Sat)
  
CH
சினிமா

ஜோதிகாவை பின்பற்றி, திருப்பதிக்கு வைத்திருந்த ரூ 40 ஆயிரம் பணத்தை உதவிய ஆசிரியையின் நெகிழ்ச்சி சம்பவம் !

ஜோதிகா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகை. இவர் நடிப்பில் வெளிவந்த ஏராளமான படங்கள் ஹிட் அடித்து மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.

காக்க காக்க படத்தில் நடிக்கும் போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர் தற்போது இரண்டாம் இன்னிங்ஸ் நடிக்க வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் ஜோதிகா நாம் கோவில்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறோமோ, அதை கொஞ்சம் குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்வோம் என்றார்.

இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது, சிலர் இதை எதிர்க்க, பலர் இதற்கு ஆதரவு தந்தனர்.

தற்போது ஜோதிகா சொன்னதை கேட்டு ஒரு ஆசிரியை திருப்பதிக்காக வைத்திருந்த ரூ 40 ஆயிரம் பணத்தைப் பள்ளி ஏழை மாணவர்களுக்கு கொடுத்து உதவியதை அனைவரும் பாராட்டியுள்ளனர். 




ஜோதிகாவை பின்பற்றி, திருப்பதிக்கு வைத்திருந்த ரூ 40 ஆயிரம் பணத்தை உதவிய ஆசிரியையின் நெகிழ்ச்சி சம்பவம் !

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு