ஜெனிவா மனித உரிமைச் சபையின் அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சி அரசாங்கத்துக்குள் குழப்பங்கள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் சா்வதேச ரீதியாகத் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைச் சமாளிக்க அரசாங்கம் உயர்மட்ட இராஜதந்திரிகளை நாடியிருப்பதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும், அமெரிக்கா மற்றும் ஜெனிவாவில் உள்ள ஸ்ரீலங்கா இராஜதந்திரிகளும் இந்த விவகாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பங்காளிக் கட்சிகளோடு கலந்துரையாடி வருகின்றார்.
0 Comments
No Comments Here ..