நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று இரவு 8.45 மணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதன் காரணமாகத் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் இரவு ஊரடங்கை அறிவித்துள்ளன. மத்திய அரசும் ஊரடங்கு தளர்வுகளில் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்த மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் கொரோனா பரவல் நிலை குறித்து பிரதமர் மோடி இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். நாட்டில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த உரை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துப் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
No Comments Here ..