இந்தியாவில் ஜூலை மாதம் வரை தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
கொரோனா 2-வது அலையில் இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகின்றது. தற்போது மாதம் ஒன்றுக்கு சீரம் நிறுவனம் 6 முதல் 7 கோடி தடுப்பூசி டோஸ்களை மட்டுமே தயாரித்து வருவதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் அது 10 கோடியாக உயர்த்தப்பட்ட பின்னர் தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும்.
ஜனவரி மாதம் புதிய கொரோனா பாதிப்புகள் குறைந்துவிட்ட நிலையில், இரண்டாவது அலையை அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை.
18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் நோக்கத்துடன், சீரம் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு 3000 கோடி முன்பணத்துடன் கடந்த மாதம் ஆர்டர் வழங்கியது. தடுப்பூசி பற்றாக்குறை குறித்த விமர்சகர்களால் நான் மிகவும் அநியாயமாகவும் தவறாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..