18,Apr 2024 (Thu)
  
CH
விளையாட்டு

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ. வி.ராமனின் பதவி காலம் கடந்த மார்ச் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடருடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து பயிற்சியாளர் பதவிக்கு தகுதி படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஏப்ரல் மாதம் அறிவித்து இருந்தது. டபிள்யூ. வி.ராமன், முன்னாள் பயிற்சியாளர் ரமேஷ் பவார், முன்னாள் வீரர்கள் கனித்கர், அஜய் ரத்ரா, தேர்வு குழு முன்னாள் தலைவர் ஹேமலதா கலா உள்பட 35 பேர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில் இருந்து 8 பேர் கொண்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டு அவர்களிடம் மதன்லால் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நேர்காணல் நடத்தியது.

இதன் முடிவில் இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான 42 வயது ரமேஷ் பவாரின் பெயர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் ரமேஷ் பவார் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய பெண்கள் அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு நவம்பர் மாதம் வெஸ்ட்இண்டீசில் நடந்த 20 ஓவர் பெண்கள் உலக கோப்பை போட்டி வரை அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. உலக கோப்பை அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்துக்கான இந்திய அணியில் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் சேர்க்கப்படாதது சர்ச்சையாக வெடித்தது. இருவரும் ஒருவரை மாறி ஒருவர் புகார் தெரிவித்தனர். தன்னை அவமானப்படுத்தியதுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க ரமேஷ் பவார் முயற்சிக்கிறார் என்று மிதாலி ராஜ் குற்றம் சாட்டினார். மிதாலி ராஜ் தந்திரமாக செயல்பட்டு அணியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்று ரமேஷ் பவார் புகார் கூறினார். இந்த பிரச்சினையால் ரமேஷ் பவாரின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை.

அதனை தொடர்ந்து அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் டபிள்யூ.வி.ராமன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரிடம் இருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு ரமேஷ் பவார் மீண்டும் பதவியை கைப்பற்றி இருக்கிறார். ரமேஷ் பவாரின் பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். அடுத்த மாதம் (ஜூன்) 16-ந் தேதி பிரிஸ்டலில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து ரமேஷ் பவார் தனது பணியை தொடங்க இருக்கிறார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு