08,May 2024 (Wed)
  
CH
இந்திய செய்தி

பிரதமர் மோடி அவசர ஆலோசனை

கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது பற்றியும் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,77,284 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 110 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,54,596 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,04,62,631 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 14,225 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 97.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது பற்றியும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




பிரதமர் மோடி அவசர ஆலோசனை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு