மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தொடங்கிய போராட்டம் ஆறு மாதங்கள் நிறைவடைவதை முன்னிட்டு வரும் 26-ம் தேதி கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, விவசாய சங்கங்களின் தலைமை அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர் பல்பீர் சிங் ரஜவல் கூறியதாவது:
வரும் 26-ம் தேதியுடன் எங்கள் போராட்டம் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடைகிறது. இதை குறிக்கும் வகையிலும், பிரதமராக மோடி பதவியேற்று அன்றுடன் ஏழு ஆண்டுகள் முடிவடைவதையொட்டியும் 26-ம் தேதி, கறுப்பு தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று நாடு முழுதும் உள்ள மக்கள், தங்கள் வீடு, கடை, வாகனங்களில் கறுப்புக்கொடி ஏற்றி, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்ப பெறாத வரை எங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..