10,May 2024 (Fri)
  
CH
விளையாட்டு

இலங்கை தொடருக்கு தமிழன் நடராஜனுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை? தெரியவந்த காரணம்

இலங்கை அணிக்கெதிரான தொடர்களில் நடராஜனுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.


இந்திய அணி, வரும் ஜுலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.


இதற்கான இந்திய அணி வீரர்களின் பெயர் பட்டியலை நேற்று பிசிசிஐ வெளியிட்டது.


இந்த இரண்டு தொடர்களுக்குமே ஷிகார் தவான் கேப்டனாகவும், புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாகவும் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் அறிவிப்புக்கான இந்த பட்டியலில், யார்க்கர் மன்னன் தமிழகத்தை சேர்ந்த தங்கராஜன் பெயர் இடம் பெறவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் தெரியாமல் இருந்தது.


இந்நிலையில், தற்போது, தங்கராஜன் இடம் பெறாததற்கு முக்கிய காரணம், அவருக்கு ஏற்பட்ட காயம் தான் என்பது தெரியவந்துள்ளது.


இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது.


இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அவர், பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகடாமியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு அவர் உடல் நலம் தேறி வந்தாலும், இன்னும் முழுமையாக குணமடையவில்லை.


இதன் காரணமாவே அவர் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது, எதிர்வரும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டும் இந்திய தேர்வுக் குழுவானது இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 




இலங்கை தொடருக்கு தமிழன் நடராஜனுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை? தெரியவந்த காரணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு