இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா இலங்கை தொடரில் இந்திய அணியில் இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அணி வரும் ஜுலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதற்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறுகையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சரியான பிட்னஸ் இல்லை என்று ராகுல் திவாட்டிய ஓரம் கட்டப்பட்டார்.
அதன் பின் பிற்கு அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தும், அவருக்கு விளையாட வாய்ப்பு தரப்படவில்லை. இது போன்ற நிலையில், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்க மறுத்தது எப்படி? ஒரு வீரரை அணியில் விளையாட வைக்காமலேயே அணியில் இருந்து நீக்குவது அநியாயம்.
ராகுல் திவாட்டியா கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக விளையாடி வருகிறார். ஹரியானா அணிக்காக பல போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் வெற்றிபெற வைத்திருக்கிறார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக அவர் விளையாடியுள்ளார். எனவே அவருக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.
டோனி தலைமையிலான சென்னை அணியில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத கிருஷ்ணப்பா கவுதமிற்கு இலங்கை தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ராகுல் திவாட்டியாவிற்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை இதெல்லாம் என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
0 Comments
No Comments Here ..