மனைவியை அடித்துகொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இலங்கை தமிழ் அகதியான லவேந்திரன் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் - கோவை காந்திமாநகர் 2வது வீதியை சேர்ந்த இலங்கை அகதியான லவேந்திரன் தனது மனைவியான கவிதாவை (32 வயது) கொலை செய்த நிலையில், தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தலைமறைவாக இருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது வாக்குமூலத்திர் தெரிவித்துள்ளதாவது,
“கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கவிதாவை திருமணம் செய்து கொண்டேன். ஆரம்பத்தில் எங்களது குடும்ப வாழ்க்கை எவ்வித பிரச்சினையும் இன்றி மிகவும் மகிழ்ச்சியாக சென்றது.
குடும்ப செலவிற்கு போதிய வருமானம் இல்லாததால், கவிதாவை அருகில் உள்ள ஸ்பின்னிங் மில்லிற்கு வேலைக்கு அனுப்பினேன். மிகவும் மகிழ்ச்சியாக சென்ற எங்கள் திருமண வாழ்க்கை, என் மனவைியின் கையில் செல்போன் வந்த பின்னர் திசை மாறியது.
எனது மனைவி வீட்டில் இருக்கும் நேரத்தில் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பார். அவள் யாரிடம் பேசுகிறாள் என்பது குறித்து கேட்டால் சரியாக, பதில் சொல்ல மாட்டாள். இதனால் எனக்கு சந்தேகம் வரும்.
0 Comments
No Comments Here ..