16,May 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

இலங்கைக்கு எந்த உதவியையும் இந்தியா வழங்கக்கூடாது- ச.இராமதாஸ்

இலங்கைக்கு எந்த உதவியையும் இந்தியா வழங்கக்கூடாது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ச.இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இலங்கை இராணுவத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு நிதி வழங்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.


இது தொடர்பில் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதனை குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை இராணுவத்துக்கு பாதுகாப்புக் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்திருப்பது இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான செயல் ஆகும்.


இந்த நிதியை இலங்கைத் தமிழர்களை ஒடுக்குவதற்காக இலங்கை அரசாங்கம் பயன்படுத்தும் ஆபத்து உள்ளது.


இலங்கைத் தமிழர் நலன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து இந்தியாவுக்கு அளித்த உறுதியை இலங்கை அரசாங்கம் காப்பாற்றவில்லை.


ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர் படுகொலை குறித்த போர்க்குற்ற விசாரணைக்கும் இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை.


எனவே, இலங்கைக்கு இந்தியா எந்த உதவியும் வழங்கக்கூடாது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.





இலங்கைக்கு எந்த உதவியையும் இந்தியா வழங்கக்கூடாது- ச.இராமதாஸ்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு