புதுடில்லியிலிருந்து அமெரிக்காவின் சன் பிரான்சிஸ்கோ நகரை நோக்கி பறந்துகொண்டிருந்த எயார் இந்தியா விமானமொன்று என்ஜின் கோளாறு காரணமாக ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
நேற்று புறப்பட்ட எயார் இந்தியா ஏஐ173 விமானத்தில் 216 பயணிகளும் 16 ஊழியர்களும் இருந்தனர் என எயார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்ஜின் கோளாறு காரணமாக, ரஷ்யாவின் தூரக்கிழக்குப் பிராந்தியத்திலுள்ள மகதான் நகரில் இவ்விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில், மேற்படி பயணிகளை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதற்காக மற்றொரு விமானம் இன்று பிற்பகல் இந்தியாவிலிருந்து மகதான் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக எயார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது
0 Comments
No Comments Here ..