28,Apr 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

தனக்கு சொந்தமான 6.6 ஏக்கரை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க முன்வந்த 100 வயது மூதாட்டி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒருநாள் பயணமாக மத்திய பிரதேச தலைநகர் போபால் சென்றார். அங்கு ராணி கமலபதி ரெயில் நிலையத்தில் இருந்து 5 வந்தே பாரத் ரெயில் சேவைகளை அவர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர் பிரதமர் மோடியை தனது மகனாக கருதி தனக்கு சொந்தமான 6.6 ஏக்கர் நிலத்தை, அவருக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது பெயர் மங்கிபாய் தன்வார். 


மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்த மூதாட்டிக்கு 12 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். ஆனாலும் தனது பிள்ளைகளைவிட பிரதமர் மோடி மீது மிகுந்த அன்பு வைத்து உள்ளார். தனது அறையிலும் பிரதமர் மோடி படத்தை மாட்டி வைத்துள்ளார். இதுதொடர்பாக மூதாட்டி மங்கிபாய் தன்வார் கூறியதாவது:- பிரதமர் மோடி கொரோனா காலத்தில் கோடிக்கணக்கான மக்களை காப்பாற்றினார். நாட்டு மக்களை தனது குடும்பமாகவே அவர் கருதுகிறார். 


எங்களையும் கவனித்துக் கொள்கிறார். எனவே அவரை மகனாக கருதி எனது பங்கான 6.6 ஏக்கர் நிலத்தை அவருக்கு வழங்க விரும்புகிறேன். 

தினமும் காலையில் எழுந்ததும் எனது அறையில் உள்ள மோடியின் படத்தை பார்ப்பேன். என்னை போன்ற கோடிக்கணக்கான விதவைப்பெண்களுக்கு அவர் ஓய்வூதியம் வழங்குகிறார். விவசாயிகளுக்கு கோதுமை, அரிசி மற்றும் உணவு கொடுக்கிறார். பயிர்கள் சேதம் அடைந்தால் உரிய நிவாரணமும் கொடுக்கிறார். 


எங்களுக்கு நல்ல வீடு கொடுத்துள்ளார். முதியவர்கள் புனித யாத்திரை செல்ல வழிவகை செய்துள்ளார். முதியோர் ஓய்வூதியத்தை மத்திய அரசு உயர்த்தி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






தனக்கு சொந்தமான 6.6 ஏக்கரை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க முன்வந்த 100 வயது மூதாட்டி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு