28,Apr 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உறவினர்களால் சுட்டுக்கொலை

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திருமணம் தொடர்பான தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உறவினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மலகாண்ட் மாவட்டத்தின் பட்கேலா தாலுகாவில் நிகழ்ந்துள்ளது. அவர்களது வீட்டிற்குள் நுழைந்த உறவினர்கள் சிலர் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். 


இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் ஆறு ஆண்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். திருமண தகராறே இந்த கொடூர கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


இதுகுறித்த தகவல் கிடைத்ததும், மாகாண துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து, சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காக பத்கேலா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளிகளை கைது செய்ய மாவட்டத்தின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களும் சீல் வைக்கப்பட்டன.

 

குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துமாறு காபந்து முதல்வர் முகமது ஆசம் கான் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கப்படும்" என்று கூறினார்.





ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உறவினர்களால் சுட்டுக்கொலை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு