04,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

முதல் கட்டமாக 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்ட சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு ஒருங்கிணைந்த புதிய விமான முனையம்

இந்த புதிய முனையத்தை கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் கையாளப்படுகின்றனர். புதிய முனையம் மூலம் 30 மில்லியன் பயணிகளை கையாளும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கியது. மே மாதம் 3-ந்தேதியில் இருந்து சோதனை முறையில் சில விமானங்கள் புதிய முனையத்தில் இயக்கப்பட்டன. ஆனால் சிறிய ரக விமானங்களான ஏர்பஸ் 320, 321 மற்றும் போயிங் ரக 737,738 விமானங்கள் மட்டுமே குவைத், இலங்கை, எத்தியோப்பியா நாடுகளுக்கு சோதனை முறையில் இயக்கப்பட்டன.


இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந்தேதி முதல் 180 இருக்கையில் இருந்து 194 இருக்கைகள் வரை உள்ள நடுத்தர விமானங்கள் இந்த புதிய முனையத்தில் இயக்கப்பட்டன. கொழும்பு, சிங்கப்பூர், துபாய், மஸ்கட், தோஹா, குவைத், மலேசியா, அபுதாபி ஆகிய நாடுகளுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன பன்னாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் அனைத்து பன்னாட்டு விமானங்களும் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் இயங்கத் தொடங்கி உள்ளது.


இதனால் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், மஸ்கட், சார்ஜா, தோகா, தமாம், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கு இயக்கப்படும் சுமார் 18 புறப்பாடு விமானங்கள், 18 வருகை விமானங்கள் என 36 பன்னாட்டு விமான சேவைகள் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் இருந்து இயங்கப்பட்டது. பெரிய ரக விமானங்களான பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர்பிரான்ஸ் ஏர்லைன்ஸ், லுப்தான்ஷா ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்லைன்ஸ், எத்தியாட் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ், ஏர் அரேபியா ஏர்லைன்ஸ், தாய் ஏர்லைனஸ் உள்பட பெரிய ரக விமானங்கள் புதிய முனையத்தில் நேற்று முதல் இயங்க தொடங்கியது. புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தினமும் 51 புறப்பாடு விமானங்களும் 51 வருகை விமானங்களும் என 102 விமானங்கள் இயக்கப்பட்டன.


இதைத்தொடர்ந்து புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம் முழு அளவில் செயல்பாட்டிற்கு வந்து விட்டன. தற்போது செயல்பாட்டில் இருக்கும் பழைய பன்னாட்டு வருகை முனையத்தை இடிக்கும் பணி அடுத்த ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்றும், 2-ம் கட்ட கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்




முதல் கட்டமாக 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்ட சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு ஒருங்கிணைந்த புதிய விமான முனையம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு