05,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

'என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் அண்ணாமலை நடைபயணம்

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் செல்கிறார். ராமேசுவரத்தில் தொடங்கும் இந்த யாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இந்த பயண திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


 அண்ணாமலையின் யாத்திரையில் கலந்து கொள்பவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. அதன்படி இதுவரை 1½ லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளார்கள். கட்சி சாராத ஏராளமானவர்கள் முன்பதிவு செய்திருப்பது பா.ஜனதா தலைவர்களை உற்சாகம் அடைய வைத்து உள்ளது.


ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்பதிவு செய்தவர்கள் அந்த அந்த மாவட்டங்களில் யாத்திரை செல்லும்போது பங்கேற்க வேண்டும். இந்த மாதம் இறுதியில் தொடங்கும் இந்த யாத்திரை வருகிற ஜனவரி மாதம் 11-ந்தேதி சென்னையில் நிறைவடைகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் யாத்திரை செல்லும் வழித்தடங்கள், தங்குமிடங்கள், பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களை யாத்திரை ஏற்பாட்டு குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்




'என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் அண்ணாமலை நடைபயணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு