01,May 2024 (Wed)
  
CH
சினிமா

நடிகையின் ஹொட்டல் அறையில் கமரா

ஜி.வி.பிரகாஷ் குமாரின் புருஸ்லீ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை க்ருத்தி கர்பாந்த்.

தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் இவர் நடித்துவருகிறார்.


இந்த நிலையில் கன்னட படத்தின் படப்பிடிப்பிற்காக பெங்களூர் சென்றபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் பகிர்ந்ததாவது, படப்பிடிப்புக்காக ஹோட்டல் ஒன்றில் தங்கியபோது அங்கே ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

பொதுவாக படப்பிடிப்புக்காக செல்லும்போது ஹோட்டலில் தங்க நேர்ந்தால் அறையை ஒருமுறை சோதனை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் ஹோட்டல் ஊழியர் ஒருவர் என் அறையில் கேமராவை வைத்து சென்றிருக்கிறார். ஆனால் கேமராவை வைப்பதில் அவர் அனுபவம் அற்றவர் என தெரிகிறது.

காரணம், செட் டாப் பாக்ஸ்க்கு பின் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் கேமரா வைக்கப்பட்டிருந்தது. இந்த விஷயத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.




நடிகையின் ஹொட்டல் அறையில் கமரா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு