03,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க அரசு முடிவு

தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்கு தயாராகும் வகையில், மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் மற்றும் சட்டத்துறையின் தமிழ்ப்பிரிவு மூலமாக தமிழ் சட்ட சொற்களஞ்சியம் தயாரித்து அச்சிடுவது, மாநில மற்றும் ஒன்றிய சட்டங்கள், அவசர சட்டங்கள் மற்றும் அவற்றின்கீழ் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் அறிவிக்கைகளையும் தமிழில் மொழிபெயர்த்தல் போன்ற பணிகளை தமிழ்நாடு அரசின் சட்டத்துறை செய்து வருகிறது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுத்து அதற்கான முயற்சிகளை முன்னாள் முதல்வர் கலைஞர் எடுத்து வந்தார். அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடி வரும் இந்த தருணத்தில் தமிழை சட்ட ஆட்சி மொழியாக்கும் அவரது கனவை நனவாக்கவும், அனைத்து மக்களுக்கும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து அவற்றை பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் பயன்பாட்டிற்காக கொண்டுசெல்ல வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது.



இந்த பணிக்காக மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்திற்கு முதற்கட்டமாக மூன்று கோடி ரூபாய், பின்னர் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.




சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க அரசு முடிவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு