29,Apr 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

உலக சாதனையை நோக்கி 12 மணிநேர தொடர் இசை நிகழ்ச்சி!

உலக சாதனையை நோக்கி 12 மணிநேர தொடர் இசை நிகழ்ச்சி நேற்று (17) ஹட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டபத்தில் நடைபெற்றுது.


இந்நிகழ்வில் தென்னிந்திய இசைபுயல் ஏ.ஆர் ரகுமான் சகோதரியும், பின்னணி பாடகியும் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரிஹானா மற்றும் உலக தமிழர் பன்நாட்டு கலைக்கூடத்தின் சர்வதேச தலைவர் ரஸ்மிரூமி அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது. குறித்த நிகழ்வில் ஏ.ஆர் ரிஹானா, ரஸ்மிரூமி அவர்களினதும் பாடல்கள் இடம்பெற்றதுடன் மலையகத்தில் பாடுவோர் பாடலாம் போட்டி நிகழ்சிக்கு சிறந்த பாடகரை தெரிவு செய்வதற்காக நடுவராகவும் ஏ.ஆர்.ரிஹானா செயற்பட்டார்.


குறித்த நிகழ்வில் கல்வி ராஜங்க அமைச்சர் அரவிந்தகுமார் முன்னாள் கொழும்பு மேயர் அசாத்சாலி உட்பட உலக புகழ்பெற்ற கலைஞர்கள் அரசியல் பிரதிநிதிகள் உட்பட உள்ளுர் கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.




உலக சாதனையை நோக்கி 12 மணிநேர தொடர் இசை நிகழ்ச்சி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு