ஜெர்மனியின் முனிச்சில் நடைபெற்ற நேஷன்ஸ் லீக் கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி போர்த்துக்கல் அணி இரண்டாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது.
ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் ஸ்பெயின், ஜூபிமெண்டி அடித்த கோல் மூலம் முன்னிலை பெற்றது. ஆனால், ஐந்து நிமிடங்களுக்குப் பின், நூனோ மென்டெஸ் போர்த்துக்கல்லுக்காக ஒரு அற்புதமான கோலை அடித்து சமன் செய்தார். முதல் பாதி முடிவதற்குள், 45ஆவது நிமிடத்தில் ஓயர்சபால் அடித்த கோலால் ஸ்பெயின் 2–1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில், போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறங்கினார்.
69ஆவது நிமிடத்தில் அவர் ஒரு அசத்தலான கோலை அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். வழக்கமான நேரம் முடிவடைந்தபோது, ஆட்டம் சமநிலையில் இருந்ததால், பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்றது. அதில் போர்த்துக்கல் அணி சிறப்பாக செயல்பட்டு, 5–3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி, 2024–25 யூபா நேஷன்ஸ் லீக் சம்பியன் பட்டத்தை வென்றது.
0 Comments
No Comments Here ..