தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகிவரும் D40 படத்தின் ஷூட்டிங் இன்று முழுமையாக முடிவடைந்துள்ளது. கதைக்களம் லண்டனில் நடைபெறுவது போல இருப்பதால் படத்தின் பெரும்பாலான பகுதி சூட்டிங் லண்டனில் தான் நடைபெற்றது.
கடைசி நாள் ஷூட்டிங் இன்று என இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் ட்விட்டரில் கூறியுள்ளார். மேலும் D40 பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளிவரும் என அறிவித்துள்ளார் அவர்.
வரும் 19ம் தேதி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது. படத்திற்கு சுருளி என பெயரிடப்பட்டிருப்பதாக தொடர்ந்து தகவல் பரவி வரும் நிலையில், படத்தின் பெயர் என்பது இந்த போஸ்டர் மூலம் உறுதியாகும்.
இந்த அறிவிப்பை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..