18,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

பயங்கரவாதி மசூத் அசார் திடீர் மாயம்- பாகிஸ்தான் தகவல்

2008-ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசார். இவன் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளான்.

இந்த பயங்கரவாத இயக்கம்தான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் மீது தற்கொலை படை தாக்குதலை நடத்தியது.

இதில் 40 வீரர்கள் பலியானார்கள். இதையடுத்து மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கடந்த ஆண்டு மே மாதம் 1-ந்தேதி அறிவித்தது.

இந்த நிலையில் சர்வதேச பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பின் சார்பில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் மசூத் அசாரையும் அவரது குடும்பத்தினரையும் காணவில்லை என்று தெரிவித்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் அக்கூட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் கூறும்போது, தங்கள் நாட்டில் 16 சர்வதேச பயங்கரவாதிகள் மட்டுமே இருந்ததாகவும், அவர்களில் 7 பேர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மற்ற 9 பேரில் லஷ்கர்-இ- தொய்பா தலைவர் ஹபீஸ் சயிது, அல்-கொய்தா அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய அப்துல் ரகுமான் உள்ளிட்ட 7 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட நிதி மற்றும் பயண கட்டுபாடுகளில் இருந்து விலக்கு அளிக்க கோரி ஐ.நா. அமைப்பிடம் விண்ணப்பிக்க இருந்தனர் என்று பாகிஸ்தான் கூறி உள்ளது.

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாத பாகிஸ்தானை சமீபத்தில் கருப்பு பட்டியலில் சேர்த்து சர்வதேச பயங்கர நிதி தடுப்பு அமைப்பு நடவடிக்கை எடுத்து இருந்தது.





பயங்கரவாதி மசூத் அசார் திடீர் மாயம்- பாகிஸ்தான் தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு