19,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

4-ம் ஆண்டு ஆட்சி தொடக்கம்- எடப்பாடி பழனிசாமி இனிப்பு வழங்கினார்

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதையொட்டி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக கடந்த 10,11-ந்தேதிகளில் 2 நாட்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பிறகு நேற்று சென்னை, காஞ்சிபுரம், வேலூர், நெல்லை, விழுப்புரம் உள்பட 14 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இன்று காலையில் தேனி, அரியலூர், தர்மபுரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்துக்கு வந்தார்.

அவரது ஆட்சி 3 ஆண்டு நிறைவு பெற்று 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி அவருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இனிப்புகளும் வழங்கினார்கள்.

கட்சி நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி பொங்க தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதேபோல் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வந்தபோதும் அவருக்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து வழங்கினார்கள். இனிப்புகளும் வழங்கப்பட்டன.

அதன்பிறகு தலைமை கழகத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.





4-ம் ஆண்டு ஆட்சி தொடக்கம்- எடப்பாடி பழனிசாமி இனிப்பு வழங்கினார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு