12,May 2024 (Sun)
  
CH
விளையாட்டு

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர்: இலங்கை ஜாம்பவான்கள் அணி அறிவிப்பு!

இந்தியாவில் நடைபெறவுள்ள வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில் விளையாடும், இலங்கை ஜாம்பவான்கள் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரிக்கெட் தொடரில் இலங்கை, இந்தியா, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளின் முன்னாள் வீரர்கள் அடங்கிய கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.

இந்த ரி-20 கிரிக்கெட் தொடர், எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி தொடக்கம், மார்ச் மாதம் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை ஜாம்பவான்கள் அணியின் தலைவராக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் திலகரட்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர முன்னாள் அதி சிறந்த வீரர்களான சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன் மற்றும் ரொமேஷ் கலுவிதாரன ஆகிய வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.

இவர்களோடு, இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற சச்சித்திர சேனநாயக்க, ரங்கன ஹேரத் மற்றும் சாமர கப்புகெதர ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

திலகரட்ன டில்ஷான் தலைமையிலான அணியில், சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன், மார்வன் அத்தபத்து, துலன்ஜன விஜேசிங்க, சாமர கப்புகெதர, பர்வீஸ் மஹரூப், ரங்கன ஹேரத், ரொமேஷ் கலுவிதாரன, உபுல் சந்தன, சச்சித்திர சேனநாயக்க, மலிந்த வர்ணபுர, திலான் துஷார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை ஜாம்பவான்கள் அணி தனது முதல் போட்டியில், மார்ச் 8ஆம் திகதி அவுஸ்ரேலிய ஜாம்பவான்கள் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டி மும்மையில் நடைபெறுகின்றது.

இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஜாம்பவான்கள் அணி, மார்ச் 7ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான்கள் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டி மும்மையில் நடைபெறுகின்றது.





வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர்: இலங்கை ஜாம்பவான்கள் அணி அறிவிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு