திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.
திமுக பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் சில ஆண்டுகளாக வயோதிகம் காரணமாக உடல்நலம் குன்றிய நிலையில் வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 24ம் தேதியன்று மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு. அங்கு கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி மரமாணார்.
43 ஆண்டுகள் தொடர்ந்து கழகத்தின் பொது செயலாளராகவும், கழக ஆட்சியில் சமூகு நலம், மக்கள் நல்வாழ்வு, கல்வி மற்றுமத் நிதி ஆகிய துறைகளின் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும், தமிழாய்ந்த பேராசிரியராகவும் விளங்கிய கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் இன்று அதிகாலை(07/03/2020) சுமார் 1 மணியளவில் இயற்கை எய்தினார்.
க.அன்பழகன் மறைவையொட்டி திமுக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அண்ணா அறிவாலயத்தில் திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. கட்சி சார்பிலான நிகழ்ச்சிகள் அனைத்தும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..