பெங்களூருவில் உள்ள கூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த நிறுவனம் மாற்று முடிவை எடுத்துள்ளது.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்திவருகிறது. சர்வதேச அளிவில் கொரோனா வைரஸால் இதுவரை 4,500-க்கும் அதிகமானோர் உயிரிழந்தும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர்.
இந்தியாவிலும் கொரேனா வைரஸினால் 70-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவர் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தார் என்பதும் உறுதி செய்யப்பட்டது. கொரோனாவை கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே பெங்களூரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து கூகுள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிப்புரிய அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, நொய்டாவிலுள்ள தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, அவருடன் பணியாற்றிய சக ஊழியர்கள் 700 பேரை சுய தனிமைக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது
0 Comments
No Comments Here ..