கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் வேகமாக உயர்ந்து வருகிறது.
கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700ஐ கடந்துள்ளது. 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நேற்று இரவு நிலவரப்படி 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழ்நாடு முழுக்க 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பலர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..