05,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைஸா வக்கீல் நோட்டீஸ்!

சென்னை: தவறான பேசியலால் முகம் வீங்கிப்போனதை தொடர்ந்து நடிகை ரைஸா வில்சன் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.


முகம் வீங்கிய ரைஸா மேலும் மாடலிங்கிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இதனால் தனது அழகில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அண்மையில் ரைசா வில்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார். அதில் ரைசா வில்சனின் முகம் வீங்கி இருந்தது.


விருப்பம் இல்லாமல் மேலும் புகைப்படத்தின் கீழ் ரைசா வில்சன் வெளியிட்ட பதிவில், ''நான் முகத்துக்கு எளிமையான முறையில் 'பேசியல்' செய்ய பெண் அழகுகலை நிபுணரிடம் சென்றேன். அந்த பெண் எனக்கு விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி சில அழகு செயல் முறைகளை செய்தார். அதன் விளைவாக எனது முகம் வீங்கி விட்டது.

பெரும் அதிர்ச்சி நான் தொடர்பு கொண்டபோது என்னை சந்திக்கவோ என்னுடன் பேசவோ அந்த பெண் மறுத்து விட்டார். ஊழியர்களிடம் கேட்டபோது அவர் வெளியூர் சென்று விட்டதாக தெரிவித்தனர் என்று கூறியிருந்தார். ரைஸாவின் இந்த புகாரும் போட்டோவும் திரைத்துறை பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


ஒரு வாரத்திற்கு வீக்கம் ரைஸா கூறிய புகாரை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த பெண் தோல் மருத்துவர் பைரவி விளக்கம் அளித்தார். அப்போது இந்த பேசியல் சிகிச்சையை எடுத்துக்கொண்டால் ஒரு வாரத்துக்கு முகம் வீக்கமாக தான் இருக்கும் என்று தான் கூறியும் ரைஸா அந்த சிகிச்சையை எடுத்துக்கொண்டார்.


முகம் பொலிவு பெறவில்லை ஆனால் தற்போது என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் என பதில் குற்றச்சாட்டை கூறினார். இந்நிலையில் நடிகை ரைஸா ஒரு கோடி ரூபாய் கேட்டு தோல் மருத்துவர் பைரவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 1.27 லட்சம் செலுத்தி சிகிச்சை எடுத்தும் முகப்பொலிவு பெறாமல் ரத்த கசிவு மற்றும் வீக்கம் தான் ஏற்பட்டது.


ரூ.1 கோடி நஷ்ட ஈடு உதவி மருத்துவர் அளித்த சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் பைரவி அளித்த சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 15 நாளில் இழப்பீடு தராவிடில் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் என நடிகை ரைசா வில்சனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தவறான பேசியல் சிகிச்சைக்காக நடிகை ரைஸா ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைஸா வக்கீல் நோட்டீஸ்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு