பாலிவுட்டின் பிரபல இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரானா ஷ்ரவன், கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு காரணமாக காலமாகியுள்ளார். 90 களில் பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளராக இருந்தார்கள் நதீம் - ஷ்ரவன். 1975 முதல் இருவரும் இணைந்து படங்களுக்கு இசையமைத்து வந்தார்கள். இவர்களின் இசையமைப்பில் 1990ல் வெளியானா ஆஷிக் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் பாராட்டைப்பெற்றன. சாஜன்,சதக்,தீவானா,திவ்வாலே,ராஜா,பர்சாத், அக்னி சாக்ஷி, ராஜா இந்துஸ்தானி, பர்தேஷ் போன்ற படங்களில் நதீம் ஷ்ரவன் இசையமைத்த பாடல்கள் வரவேற்ப்பை பெற்றன.
66வயது ஷர்வான் கொரோனாவால் சமீபத்தில் பாதிக்கப்பட்டார்.
19.04.2021 அன்று கடந்த திங்கள் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றே அவருடைய நிலமை கவலைக்கிடமாக இருந்தது. இந்திலையில் சிகிச்சை பலனின்றி ஷரவன் உயிழந்துள்ளார். நேற்றிரவு 10.15 மணிக்கு காலமானதாக ஷ்ரவனின் மகன் சஞ்சீவ் ராத்தோட் கூறியுள்ளார். ஷரவனின் மறைவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்...Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
0 Comments
No Comments Here ..