28,Apr 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

இந்தியாவுக்கு உதவி ஐ.நா. பொதுச்செயலர்

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாவது அலையை ஒழிக்க, அந்நாட்டுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக, ஐ.நா பொதுச் செயலர் ஆன்டோனியோ கட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து உள்ள இந்த சோதனை மிகுந்த காலத்தில் இந்திய மக்களுக்கு ஆதரவாக, ஐ.நா. துணை நிற்கின்றது. இந்தியாவுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் அதிகரிக்க, ஐ.நா தயாராக உள்ளது என்று அவர் கூறினார். இதற்கு இந்தியாவுக்கான ஐ.நா நிரந்தர பிரதி நிதி திருமூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுச் சபையின் தலைவர் வோல்கன் பாஸ்கிர் கூறுகையில், அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி அளித்து உதவிய இந்தியாவில், தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கின்றது. இந்த நேரத்தில், அனைத்து நாடுகளும், இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் எனவும் கூறினார்.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்






இந்தியாவுக்கு உதவி ஐ.நா. பொதுச்செயலர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு